வன்னியர் அடையாளம் அழிப்பு:
*********************************************
வடபழனி முருகன் கோவிலுக்கு வடமேற்கே, நெற்குன்றம் சாலையில் வடபழனி கோவிலை உருவாக்கிய சித்தர்கள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை நிர்மானித்து இதற்கான மண்டபத்தை 1997 இல் கட்டினார்கள்.
*********************************************
வடபழனி முருகன் கோவிலுக்கு வடமேற்கே, நெற்குன்றம் சாலையில் வடபழனி கோவிலை உருவாக்கிய சித்தர்கள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை நிர்மானித்து இதற்கான மண்டபத்தை 1997 இல் கட்டினார்கள்.
அவ்வாறு 'வடபழனி முருகன் கோவில் உருவாகக் காரணமான சித்தர்கள் ஆலயம்' அமைக்கப்பட்ட போது அதற்கான கல்வெட்டில் சித்தர்களின் சாதி அடையாளத்தை மாற்றிவிட்டார்கள். அதாவது:
முதலாம் சித்தர்: அண்ணாசாமி நாயகர்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி செட்டியார்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி செட்டியார்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்
- என்பதை:
முதலாம் சித்தர்: அண்ணாசாமி தம்பிரான்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி தம்பிரான்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி தம்பிரான்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்
- என்று மாற்றிவிட்டனர்.
அதாவது, வன்னியர், செட்டியார் என்கிற சாதி அடையாளம் மறைக்கப்பட்டது. இந்த மூன்று சித்தர்களும் ஒரே குடும்பத்தை (தம்பிரான்) சேர்ந்தவர்கள் என்பது போன்ற கட்டுக்கதையைக் கட்டிவிட்டார்கள்.
இப்போது தினமலர் பத்திரிகை போன்ற பல இடங்களிலும் வடபழனி முருகன் கோவிலை உருவாக்கியவர் 'அண்ணாசாமி தம்பிரான்' என்கிற கட்டுக்கதைதான் வலம் வருகிறது.
வன்னியர் சங்கத்தின் போராட்டம்
அண்ணாசாமி நாயகர் என்கிற பெயரை அண்ணாசாமி தம்பிரான் என்று மாற்றியதற்கு வன்னியர் சங்கம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து 'அண்ணாசாமி தம்பிரான்' என்பதை வடபழனி கோவில் தென்கிழக்கு மண்டபப் படத்திலும், கோவில் இணயதளத்திலும் 'நாயக்கர்' என்று மாற்றியுள்ளனர்.
தமிழக அரசு கோவில் இணயதளத்தில் 'அண்ணாசாமி நாயக்கர்' என இருப்பதை இங்கே காண்க: ARULMIGU VADAPALANI ANDAVAR THIRUKOIL
சித்தர்கள் ஆலயத்தில் உள்ள அண்ணாசாமி நாயக்கர் நினைவிடத்தில் 'தம்பிரான்' என்பதை அழித்துவிட்டு, அதன்மேல் 'நாயக்கர்' என எழுதியுள்ளனர். இப்போது இரண்டு பெயர்களுமே ஒன்றாகி தெரிகிறது!
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில், இன்னமும் 'அண்ணாசாமி தம்பிரான்' என்றே உள்ளது. தினமலர் நாளிதழ் அண்ணாசாமி நாயக்கரை, அண்ணாசாமி தம்பிரான் என்று சொல்வதை இங்கே காண்க: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில், இன்னமும் 'அண்ணாசாமி தம்பிரான்' என்றே உள்ளது. தினமலர் நாளிதழ் அண்ணாசாமி நாயக்கரை, அண்ணாசாமி தம்பிரான் என்று சொல்வதை இங்கே காண்க: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
வடபழனி ஆலய கோபுர பதாகையில் அண்ணாசாமி நாயக்கர் என்று மாற்றுயுள்ளனர். ஆனால், இராமலிங்க செட்டியார் என்பது இராமலிங்க தமிபிரான் என்றுதான் உள்ளது.
தொடரும் இனவெறி:::
சுமார் 150 ஆண்டுகால வரலாற்றிலேயே இப்படி அப்பட்டமாக வன்னியர் வரலாற்று அழிப்பை செய்கிறவர்கள், கடந்த 1000 ஆண்டுகளில் எப்படியெல்லாம் இனவெறி வரலாற்று அழிப்பு வேலைகளைச் செய்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் செய்த மாபெரும் சாதனைகள் மறைக்கப்படுவதும், ஒரு சமூக நீதிப் போராளியான மருத்துவர் அய்யா அவர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு சாதி வெறியர் என்று பதிவுசெய்யப்படுவதும் - வன்னியர்கள் எனும் இனக்குழுவின் வரலாற்றை அழிக்கும் இனவெறி (VANNIYAPHOBIA) திட்டத்தின் ஓர் அங்கம்தான்.
அடையாள அழிப்பு இனவெறியர்களையும், அவர்களது தந்திரங்களையும் முறியடிப்பது ஒவ்வொரு வன்னியரின் கடமை என்பதை உணரும் காலம் வரவேண்டும். அப்போதுதான் உண்மை இனவெறியர்கள், நம்மைப் பார்த்து சாதிவெறியர் என்று சொல்லும் அவலத்தை முறியடிக்க முடியும்.
No comments:
Post a Comment